வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்.!!
வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்.!!

வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப நல உதவித்தொகையானது ஒரு லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
மேலும் தீ விபத்துகளில் பாதிக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத் தொகையானது 5 ஆயிரம் ஒரு லட்ச ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு செய்து இழப்பீடுத் தொகை, நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

