Theme Check

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம்.. அரசு சிறப்பு ஏற்பாடு !!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம்.. அரசு சிறப்பு ஏற்பாடு !!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம்.. அரசு சிறப்பு ஏற்பாடு !!
X

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தும் வகையில் அதற்கு பொறுப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழக அரசு பணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 719 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 10 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்கும் வகையில் 28.85 கோடி ரூபாய் வங்கிக் கடன் உதவியை வழங்கப்பட்டது. இந்த நிலையில், ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட மகளிர் திட்ட அலகு திட்ட அலுவலர் லலிதா பிரபாகர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

secretariate

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பெண்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் சுய தொழில் புரிந்து சமூகத்தில் வாழ மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கினார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து பெண்கள் சுய தொழில் புரியும் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டன.

இந்த திட்டத்திற்கு தற்போதைய ஆட்சியில் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதமரின் ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக ஒரு பயனாளிக்கு ரூ.10,000 வீதம் 50 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

secretariate

பின்னர் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, 10 ஆண்டு காலம் சோர்ந்து கிடந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்பொழுது புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். முதல்வர் பதவியேற்ற 7 மாத காலத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 7,56,142 பயனாளிகளுக்கு ரூ.2,750 கோடி வங்கிக் கடன் உதவிகளை வழங்கியுள்ளார்.

கொரோனா, பருவமழை என பல்வேறு பொருளாதார நெருக்கடிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.2,750 கோடிக்குக் கடனுதவிகளை வழங்கியுள்ளார். சமூகத்தில் மகளிர் தன்னம்பிக்கையோடு வாழ முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it