'அரசு வீடு கிடைத்துள்ளது.. ஆதார் அட்டை காட்டுங்க' - மூதாட்டியை ஏமாற்றி குழந்தை கடத்தல்!!
'அரசு வீடு கிடைத்துள்ளது.. ஆதார் அட்டை காட்டுங்க' - மூதாட்டியை ஏமாற்றி குழந்தை கடத்தல்!!

தெலங்கானா மாநிலத்தில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
தெலங்கானா மாநிலம், சிங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவருடைய மகன் ஹரிஷ்(11). நேற்று மாலை வீட்டிற்கு வெளியே ஹரீஷ் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பைக்கில் வந்த 2 பேர் ஹரிஷின் பாட்டியிடம் பேச்சுகொடுத்தனர். அதாவது, அரசின் வீட்டு வசதி திட்டத்தில் இரண்டு படுக்கை அறையுடன் கூடிய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மூதாட்டியிடம் கூறினர். பின்னர் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர்கள் அதற்காக ஆதார் கார்டை காட்டும்படியும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஆதார் அட்டை எடுத்துவர வீட்டிற்கு உள்ளே மூதாட்டி சென்றுள்ளார். மூதாட்டி வீட்டிற்குள் சென்றவுடன் அவ்விருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் எடுத்துவந்த இருசக்கர வாகனத்தில் அக்குழந்தையை கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in