7 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும்.. அரசு அதிரடி உத்தரவு..!
7 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும்.. அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள ஈரோடு, சேலம் தேனி, வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் சமவெளிப் பகுதியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (மாற்றுத்திறனாளிகள், இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்களுக்கு விலக்கு) மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பதவி உயர்வு பணியில் காலியாக உள்ள இடங்களில் முதலில் மலைப்பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story

