முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து !!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து !!

ஆட்சி பொறுப்பில் ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்து, இன்று 2ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த ஓராண்டில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.
முதலமைச்சராக ஆட்சி பொறுப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், "ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவி தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார், என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கு மோதல்போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
newstm.in

