Theme Check

#BREAKING:- ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்.. அரசு அறிவிப்பு..!

#BREAKING:- ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்.. அரசு அறிவிப்பு..!

#BREAKING:- ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்.. அரசு அறிவிப்பு..!
X

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Andhra CM Jagan Mohan Reddy announces development of health infrastructure  in state amid Covid-19 surge - Coronavirus Outbreak News
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இருவரின் உடல்களும் இன்று அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் கூறியது.

விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருவரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, இவர்கள் இருவரின் இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50,00,000 நிவாரணம் - முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி!! • Seithi Solai
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா முப்படைத்தளபதி பிபின் ராவத் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it