ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது.. பாகிஸ்தானின் பாபர் அசாம் தேர்வு !
ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது.. பாகிஸ்தானின் பாபர் அசாம் தேர்வு !

ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரை முன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான தேர்வு அதன்அடிப்படையில் நடந்தது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பாபர் அசாம்-க்கும் இந்த விருது கிடைத்துள்ளது. சமீபக்காலமாக இவரது பேட்டிங் பாராட்டும் வகையில் உள்ளது. ஓய்வுபெற்ற வீரர்கள் பலரும் பாபர் அசாம் பேட்டிங் திறமையை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

