Theme Check

இந்தியாவில் நகர் பகுதிகளைவிட கிராமத்தில் தான் அதிக பேர் மது குடிக்கின்றனர்.. ஆய்வில் தகவல் !

இந்தியாவில் நகர் பகுதிகளைவிட கிராமத்தில் தான் அதிக பேர் மது குடிக்கின்றனர்.. ஆய்வில் தகவல் !

இந்தியாவில் நகர் பகுதிகளைவிட கிராமத்தில் தான் அதிக பேர் மது குடிக்கின்றனர்.. ஆய்வில் தகவல் !
X

இந்தியாவில் நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் தான் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

நாடு முழுவதும் புகையிலை மற்றும் மது குடிப்போர் குறித்த கணக்கெடுப்பை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5 (2019-21) என்ற அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது ஆய்வு முடிவுகள் வெ!ளிவந்துள்ளன. அதன்படி, நாடு முழுவதும் ஆண்களிடையே புகையிலை பயன்பாடு 38% ஆக உள்ளது. கிராமப்புற ஆண்களில் 42.7% பேர் புகையிலை புகைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
smoking

மேலும், நகர்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 28.8% மற்றும் 5.4% என்ற அளவில் புகையிலையை பயன்படுத்துகின்றனர். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் பத்தில் ஒருவர் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

அதுவே, மது குடிப்பவர்களில் கணக்கெடுக்கப்பில் கிராமப்புறங்களில் ஆண்களில் 19.9% பேர் மது அருந்துகிறார்கள். நகர்ப்புற ஆண்களில் 16.5% பேர் மது குடிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 1.3% பெண்கள் மட்டுமே மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

smoking

இந்த ஆய்வு கடந்த 2019 ஜூன் முதல் 2020 ஜனவரி இறுதி வரையும் முதற்கட்டமாகவும், 2020 ஜனவரி முதல் 2021 ஏப்ரல் இறுதி வரை இரண்டு கட்டமாகவும் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 17 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it