தமிழகத்தில் அதிகரிக்கும் விபச்சாரம்!! 13 பேர் கைது!!
புதுக்கோட்டையில் அதிக அளவில் பாலியல் தொழில் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தார். இந்நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, அபிராமி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் அதிக அளவில் பாலியல் தொழில் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தார். இந்நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, அபிராமி நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த 7 இடைத்தரகர்கள் மற்றும் 5 பெண்களைக் கைது செய்தனர். மேலும், அவர்களுடைய கார், ஆட்டோ, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபோன்று இன்னும் பல இடங்களில் சோதனை தொடர உள்ளது என்றும், பொதுமக்கள் பாலியல் தொழில் நடப்பது குறித்து தகவல் அறிந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in

