Theme Check

பிளாஸ்டிக்கை ஒழிக்க நூதன விழிப்புணர்வு..!

பிளாஸ்டிக்கை ஒழிக்க நூதன விழிப்புணர்வு..!

பிளாஸ்டிக்கை ஒழிக்க நூதன விழிப்புணர்வு..!
X

பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ஆனாலும், பல கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மஞ்சள் பை' திட்டத்தை வழியுறுத்தி மதுரையில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் |  Innovative Awareness Campaign in Madurai guiding the yellow bag project |  Puthiyathalaimurai - Tamil News ...
இதையடுத்து, முதல்வரின் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முதல்வரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மக்கள் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த வலியுறுத்தியும் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில், பிரமாண்ட மஞ்சப் பையை உடலில் மாட்டிக் கொண்டு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மஞ்சள் பை' திட்டத்தை வழியுறுத்தி மதுரையில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் |  Innovative Awareness Campaign in Madurai guiding the yellow bag project |  Puthiyathalaimurai - Tamil News ...
அப்போது, பிளாஸ்டிக்கின் தீமைகளை கருதி பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மக்கள் மஞ்சப் பைகளை பயன்படுத்த வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

Next Story
Share it