Theme Check

தலைவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது.. பாஜகவில் இணைந்தார் சரத்பாபு….!

தலைவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது.. பாஜகவில் இணைந்தார் சரத்பாபு….!

தலைவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது.. பாஜகவில் இணைந்தார் சரத்பாபு….!
X

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளராக இருந்தவர் இ.சரத்பாபு. இவர், கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியின் மீது ஆர்வம் குறைந்து விட்டதாக குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கடந்த 25-ம் தேதி விலகினார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் சரத்பாபு நேற்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை அளித்து அண்ணாமலை வரவேற்றார்.

இதற்கிடையே, மநீம துணைத் தலைவர் மவுரியா வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தலைமை நிலைய மாநிலச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சரத்பாபு உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே, கட்சியினர் இனி அவருடன் கட்சி ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it