Theme Check

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை.. காஸாவில் பெரும் இழப்பு.. தவிக்கும் மக்கள் !

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை.. காஸாவில் பெரும் இழப்பு.. தவிக்கும் மக்கள் !

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை.. காஸாவில் பெரும் இழப்பு.. தவிக்கும் மக்கள் !
X

இஸ்­ரேல் இடை­வி­டா­மல் காஸா மீது குண்­டு­களை வீசி தாக்­கி வருவதால் அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் உருக்குலைந்தும் தரைமட்டமாகியும் வருகிறது. உலக நாடுகளை குரல்களை காதில் கேட்காமல் இரு நாடுகளும் மோதிக்கொள்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்­ரே­லுக்­கும் பாலஸ்­தீ­னத்­துக்­கும் இடையே இரண்­டா­வது வார­மாக சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்­பி­ன­ரும் போரை நிறுத்த வேண்­டும் என்று உலக நாடு­கள் அழைப்பு விடுத்­தி­ருந்­தா­லும் இஸ்­ரே­லும் பாலஸ்­தீ­ன­மும் காதில் வாங்­கிக்கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இரு நாடுகளும் வானில் ஏவுகனை வீசி மாறி மாறி தாக்கிக்கொண்டு வருகின்றன.

இதில் காஸாவில் தான் பெரியளவில் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அங்கு முக்­கிய சாலை­கள், பாது­காப்­புக் கட்­ட­டங்­கள், போரா­ளி­க­ளின் பயிற்சி முகாம்­கள், குடி­யி­ருப்­புக் கட்டடங்­கள் ஆகி­ய­வற்றை இலக்­கா­கக் கொண்டு இஸ்­ரேல் குண்டு­களை அடுத்­த­டுத்து வீசி­யது. இந்த வெடிச்­சத்­தம் இரவு முழு­வ­தும் பாலஸ்­தீ­னத்­தின் பல பகு­தி­களில் எதி­ரொ­லித்­தது.

ஹமாஸ் உயர்மட்ட தள­ப­தி­க­ளுக்­குச் சொந்­த­மான ஒன்­பது குடி­யி­ருப்­பு ­க­ளை­யும் இஸ்­ரே­லிய ராணு­வம் தரைமட்டமாக்கியது. காஸா போரா­ளி­கள் ஏறக்­கு­றைய 60 ஏவு­க­ணை­களை இஸ்­ரே­லிய நக­ரங்­கள் மீது பாய்ச்­சி­ய­தாக இஸ்­ரே­லிய ராணு­வம் குற்­றம் சாட்­டி­யது. எனினும் அதனை வானிலேயே தடுத்து நிறுத்தி இஸ்ரேல் அழித்துதது. இதேபோல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தமுடியாத அளவுக்கு வானிலையே ஏவுகனைகளை தாக்கி அழிக்கிறது.

ஹமாஸ் அமைப்பிடம் அப்படி கருவி இல்லாததால் காஸா பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இஸ்­ரே­லின் தாக்குதலில் வடக்கு காஸா­வில் உள்ள தொழிற்­சாலை தீப்­பற்றி எரிந்­தது. அதி­காலை முழு­வ­தும் இஸ்­ரே­லின் குண்டு மழை சத்­தம் கேட்­டுக் கொண்டே இருந்­தது. ஆனால் இது­வரை 58 குழந்­தை­கள், 34 பெண்­கள் உட்­பட 197 பேர் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

போரை நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். மேலும் எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து விவாதித்து உள்ளார். இதனையடுத்தும் இஸ்ரேன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it