ஜெய் ஹிந்த், தயவுசெய்து உதவுங்கள்! - பிரியங்கா காந்தி பகிர்ந்த பதறவைக்கும் வீடியோ !!
ஜெய் ஹிந்த், தயவுசெய்து உதவுங்கள்! - பிரியங்கா காந்தி பகிர்ந்த பதறவைக்கும் வீடியோ !!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் அனைத்து பெரு நகரங்களிலும் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் அருகில் உள்ள வேறுநாடுகளின் எல்லைகளுக்கு சென்று தப்ப முயன்று வருகின்றனர்.
உக்ரைனில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடனான உக்ரைனின் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் இந்தியா விமானங்கள் மூலம் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில், அவ்வாறு தப்ப முயற்சிக்கும் நிலையில் இந்திய மாணவி ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளம்பெண் பேசும் வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தயவுசெய்து, ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள், என்று கூறுகிறார்.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் என்று கூறும் கரிமா மிஸ்ரா, உதவிக்கான அழைப்புகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பெரும் அச்சமாக உள்ளது. நாங்கள் எல்லா பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளோம் ... யாரும் உதவவில்லை, எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை, என்று அவர் கூறினார். நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில், மக்கள் வருகிறார்கள், அவர்கள் குழப்பத்தை உருவாக்கி உள்ளே வர முயற்சிக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் காத்திருக்கும் போது அவர்களின் விரக்தியை அதிகப்படுத்தியதாகத் தெரிகிறது.
எல்லைக்கு பேருந்தில் சென்ற எங்கள் நண்பர்கள் சிலரை ரஷ்ய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக எங்களிடம் கூறப்பட்டது. அவர்கள் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், என்று கரிமா கூறினார்.
இறுதியில் கண்ணீர் மல்க பேசிய அந்த மாணவி, இதை நாங்கள் திரைப்படங்களில் பார்த்தோம், நாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தோம்.. ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை... தயவு செய்து எங்களுக்கு உதவ யாரையாவது விமானத்தில் அனுப்புங்கள். ராணுவம், இல்லையெனில் நாங்கள் இங்கிருந்து செல்ல முடியாது என்று நினைக்கிறோம்... இந்த இடத்தில் நாங்கள் பாதுகாப்பாக இல்லை. தயவுசெய்து, எங்களுக்கு உதவுங்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! யார் பார்க்கிறார்களோ, தயவுசெய்து இந்த வீடியோவைப் பகிரவும், என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து பிரியங்கா காந்தி, இதுபோன்ற தகவல்கள் மிகவும் வேதனையானவை. கடவுளின் பொருட்டு, இந்த குழந்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். முழு நாடும் இந்த மாணவர்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் உள்ளது. நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரை டேக் செய்துள்ளார் பிரியங்கா காந்தி.
…@narendramodi जी, @DrSJaishankar जी यूक्रेन से आ रहे भारतीय छात्र-छात्राओं के वीडियो मन को बहुत ही ज्यादा व्यथित करने वाले हैं। इन बच्चों को भारत वापस लाने के लिए जो कुछ भी बन पड़ता है , भगवान के लिए, वह करिए। पूरा देश इन छात्र-छात्राओं और इनके परिवारों के साथ है।...1/2 pic.twitter.com/PfmBw8McLY
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 27, 2022
newstm.in

