ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் வீடு, அலுவலகத்தில் சோதனை!!
ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மீது மோசடி வழக்குப்பதிவு!!

ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயலின் மும்பை வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனியாக ஜெட் பிரிவிலேஜ் என்ற நிறுவனத்தை தொடங்கியது. பிறகு 2014ஆம் ஆண்டு அபுதாபியை சேர்ந்த எதியாட் நிறுவனம், ஜெட் பிரிவிலேஜ் நிறுவனத்தின் 50.1 சதவீத பங்குகளை வாங்கியது. மீதமுள்ள 49.9 சதவீத பங்குகளை ஜெட் ஏர்வேஸ் கொண்டிருந்தது. இதில் நடந்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் சுமார் 46 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நரேஷ் கோயல் மீதும், அவரது மனைவி அனிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, நரேஷ் கோயலின் மும்பையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் மீது அமலாக்கத்துறை மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
newstm.in