குழந்தையை கடத்தினார்.. ஆனால் தண்டனை இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் சுவாரஸ்யம் !
குழந்தையை கடத்தினார்.. ஆனால் தண்டனை இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் சுவாரஸ்யம் !

கடத்தப்பட்ட நபரை தாக்காமல் மரியாதையாக நடந்துகொண்டால் சட்டப்படி கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 6ஆம் வகுப்பு மாணவரை கடத்தி பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்க மூன்று விஷயங்கள் அத்தியாவசியம் என நீதிமன்றம் தெரிவித்தது.
அதாவது, ஒரு நபர் கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருப்பது, அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது, பணம் வழங்காவிட்டால் கடத்தப்பட்டவர் கொலை செய்யப்படுவார் என மிரட்டுவது. இதில், தெலங்கானா கடத்தல் வழக்கில் 2ஆம் மற்றும் 3ஆம் விதிகள் ஒத்துப்போகவில்லை.

ஏற்கெனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கடத்தப்பட்ட நபருக்கு கடத்தல்காரர் கொலை மிரட்டலோ விடுக்கவோ, அச்சுறுத்தவோ இல்லை என விசாரணையில் தெரியவந்தது.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், அவருக்கு 5,000 ரூபாய் அபராதமும், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

