பென்சன் வாங்குபவர்களுக்கு கடைசி வாய்ப்பு.. இன்னும் 2 நாட்கள் தான் டைம்! !!
பென்சன் வாங்குபவர்களுக்கு கடைசி வாய்ப்பு.. இன்னும் 2 நாட்கள் தான் டைம்! !!

பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். அனால் கொரோனா போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.
கால அவகாசம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கு ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் வருவதில் சிக்கல் ஏற்படும். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது எளிதான காரியம்தான். முன்பெல்லாம் இதற்காக மூத்த குடிமக்கள் வங்கிக் கிளைகளுக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது அது எளிதாகிவிட்டது. வங்கிக் கிளைக்கு போகத் தேவையில்லை.

தபால்காரர்கள் வாயிலாக வீட்டுக்கே வந்து ஆயுள் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வீட்டில் அமர்ந்தபடியே வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியும் இப்போது உள்ளது.
பொதுச் சேவை மையங்களிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பென்சனர்களுக்கு ஏதுவாக இதுபோன்ற நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்துவிட்டால் அதனைத் தொடர்ந்து பென்சன் வாங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என கூறப்படுகிறது.
newstm.in

