மழையில் நனைந்த படி தெருவில் நடந்து சென்ற சிறுத்தை குட்டி...!!
மழையில் நனைந்த படி தெருவில் நடந்து சென்ற சிறுத்தை குட்டி...!!

மும்பையில் மழையில் நனைந்த படி தெருவில் நடந்து சென்ற சிறுத்தை குட்டியை விலங்குகள் நல அமைப்பினர் மீட்டனர்.
மும்பையின் ஆரே காலனியில் தாயை பிரிந்து வனப்பகுதியில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்த சிறுத்தை குட்டி ஒன்று அங்குள்ள தகர ஷெட்டிற்குள் நுழைய முயன்றது.
இதனை பார்த்த மக்கள் விலங்குகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த அமைப்பினர் மழையில் நனைந்து சேரும் சகதியுமாக இருந்த சிறுத்தை குட்டியை மீட்டு, அதனை சிறு பிள்ளை போல கம்பளி போர்த்தி தூங்க வைத்தனர்.
தகவல்களின்படி, காட்டில் உள்ள சிறுத்தையை தாய் சிறுத்தையுடன் மீண்டும் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
A #leopard cub, believed to be separated from its mother, was spotted walking in the #rain on a street in #Mumbai’s #Aarey Milk Colony.#LeopardCub #Wildlife #AareyForest #MumbaiRains #Rescue https://t.co/m2GXjCvzrx
— India.com (@indiacom) September 29, 2021

