கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் காத்திருக்கிறது.. தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி எச்சரிக்கை

கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் காத்திருக்கிறது.. தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி எச்சரிக்கை

கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் காத்திருக்கிறது.. தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி எச்சரிக்கை
X

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றைவிட வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அதன் பல்வேறு திரிபுகள் அடுத்தடுத்து பரவி நிலைகுலையச் செய்துள்ளன. கொரோனா சிறிது சிறிதாக குறைந்துவந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் வகை பரவி மக்களை பெரும் அச்சத்தில் தள்ளியுள்ளது.

sarah-gilbert

இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட், பெருந்தொற்றுகள் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளார். அவர் தனது உரையில், ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.

நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது. பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும். ஒமைக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும். அதுவரை கவனத்துடன் இருப்பதோடு புதிய கிருமிப்பரவலின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it