இறந்த குட்டியை கண்ணீருடன் தூக்கிச் செல்லும் தாய் யானை!! VIDEO
இறந்த குட்டியை கண்ணீருடன் தூக்கிச் செல்லும் தாய் யானை!! VIDEO

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டியை, தாய் யானை கண்ணீருடன் தூக்கிச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற பகுதியில், அம்பாரி தேயிலைத் தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானைக்குட்டி எப்படி இறந்தது என்று தெரியவில்லை.
அப்போது குட்டியை தேடிக்கொண்டு தாய் யானை வந்தது. இறந்து கிடந்த குட்டியை கண்ட தாய் யானை, கண்ணீர் பொங்க குட்டியின் உடலை தும்பிக்கையால் தூக்கியது.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
வனத்துறையினர் தாய் யானையை விரட்ட முயன்றும் குட்டியின் உடலை தும்பிக்கையில் ஏந்தியபடி தாய் யானை அந்த இடத்தை விட்டு வெளியேறியது. இந்தக் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
யானைக்குட்டி இறப்பின் காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தியாவில் யானைகள் இறப்பு அதிகரிப்பது, காடுகளின் அழிவையே குறிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
newstm.in

