குழந்தையை பார்க்க இரவில் வந்த மச்சினி.. நண்பருடன் சேர்ந்து சீரழித்த அக்கா கணவர்!!
குழந்தையை பார்க்க இரவில் வந்த மச்சினி.. நண்பருடன் சேர்ந்து சீரழித்த அக்கா கணவர்!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வரும் ஒரு தம்பதியருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இருவரும் குழந்தையை பராமரித்து வந்த நிலையில், குழந்தையின் தாயார் பணி நிமிர்த்தமாக வெளியூர் சென்றார். இந்த நேரத்தில் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இது குறித்து தனது மனைவியிடம் கூறினார். மனைவியும் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அவரது தங்கையை வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 15 வயதான அந்த சிறுமியும் மாமா பேச்சை நம்பி இரவில் வீட்டிற்கு வந்து அந்த வீட்டில் தங்கினார்.
பிறகு மாமா வெளியே சென்று நன்றாக குடித்துவிட்டு அவரின் இன்னொரு நண்பரோடு சேர்ந்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த மச்சினியை அருகிலுள்ள காலி மனைக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்தார். அவருடைய நண்பரும் சிறுமியை பலாத்காரம் செய்தார்.
மறுநாள் பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியதும், அவர்கள் அந்த இருவர் மீதும் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய.போலீசார் நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்தனர் .
newstm.in