புகழ்பெற்ற டிக் டாக் ஆன்ட்டி கொலை - இளைஞரின் வெறிச்செயல்
அரிஹந்த் கார்டன் சொசைட்டியில் வசித்து வந்த 49 வயதான நீர்ஜா சவுகான் எனும் பெண்மணி டிக்டாக்கில் அவ்வப்போது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிர் ராகவ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். நாட்கள் ஆக ஆக இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

நொய்டாவில் திருமணமான பெண் ஒருவரை கொலை செய்ததாக ராகவ் குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரிஹந்த் கார்டன் சொசைட்டியில் வசித்து வந்த 49 வயதான நீர்ஜா சவுகான் எனும் பெண்மணி டிக்டாக்கில் அவ்வப்போது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிர் ராகவ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். நாட்கள் ஆக ஆக இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
அந்தப் பெண்மணியின் கணவர் வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராகவ் குமார் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகவ், வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு எட்டு மணி நேரத்தில் இளைஞரை கைது செய்தனர்.
இளைஞரிடமிருந்து பெண்மணியின் மொபைல்போன், வீட்டுசாவி ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in