நீரிழிவு நோய்க்கு புது மருந்து! ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

நீரிழிவு நோய்க்கு புது மருந்து! ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

நீரிழிவு நோய்க்கு புது மருந்து! ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
X

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் உடையவர்களுக்கு இன்சுலின் மருந்தினை உடலில் ஊசிகளால் செலுத்துவதன் மூலமே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாய் வழியே எடுத்துக் கொள்ளும்மருந்தினை அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து ஊசி மூலம் தோலுக்கடியில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து ஊசிகளை உடலில் செலுத்துவதால் பலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை தடுக்கும் வகையிலும், இதற்கு மாற்றாகவும், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையின் சார்பில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் வாய்வழியே உட்கொள்ளும் இன்சுலின் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இன்சுலினை நானோ என்ற மிக நுண்ணிய துகள்களாக மாற்றி அதனை சுற்றி காஸ்ட்ரோ ரெசிஸ்டன்ட் இமைன் என்ற துகளுடன் கேவேலன்ட் ஆர்கானிக் பிரேம்ஒர்க் நானோ துகள்களை இணைத்து உறைபோல போர்த்தப்பட்டு உட்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வயிற்றில் சென்றவுடன் பாதுகாப்பாக மேலுறை கரைந்து இன்சுலின் வெளிப்படுகிறது. நானோ துகள்களை விழுங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் சர்க்கரையின் அளவு உடலில் சமநிலைப்படுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களின் உடலுக்கு எந்த விதமான ஒவ்வாமை மற்றும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு கொடையாக அமையும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it