Theme Check

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு.. வரும் 10ம் தேதி முதல் அமல்..!

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு.. வரும் 10ம் தேதி முதல் அமல்..!

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு.. வரும் 10ம் தேதி முதல் அமல்..!
X

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்திருக்கிறது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.

மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினாலும், ரயிலில் பயணம் செய்தாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், UTS செயலி வழியாக ஜனவரி 31-ம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

Next Story
Share it