யாரும் கவலைப்பட வேண்டாம்.. ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் உறுதி..!
யாரும் கவலைப்பட வேண்டாம்.. ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் உறுதி..!

தலைநகர் டில்லியில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் கெஜ்ரிவால், அதன் பின்னர் கூறியதாவது:
“யாரும் கவலைப்பட வேண்டாம். ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். மக்களை காக்க வேண்டிய கடமை உள்ளது. அவர்களின் வேலைவாய்ப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டில்லியின் என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதனை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
டில்லியில் கொரோனா உச்சமடைதல் தொடர்பாக யாரும் எந்த கருத்தையும் கூறவில்லை. தற்போது தொற்று உறுதியாகும் விகிதம் 25 சதவீதமாக உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என பார்ப்போம்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் படிப்படியாக அகற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

