இனி விமான பயணத்தில் "WiFi" வசதி!! - மத்திய அரசு அறிவிப்பு.!
விமான பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் மாற்றுவதற்கான முன்னெடுப்பில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இனி விமான பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 29ம் தேதி வெளியிட்டது. அதில் விமானியின் பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று, இனி விமானத்தில் பயணிப்பவர்கள், தங்களது பயண நேரத்தில் WiFi வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று

விமான பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் மாற்றுவதற்கான முன்னெடுப்பில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இனி விமான பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 29ம் தேதி வெளியிட்டது. அதில் விமானியின் பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று, இனி விமானத்தில் பயணிப்பவர்கள், தங்களது பயண நேரத்தில் WiFi வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு WiFi வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதியை ஃப்ளைட் மோடில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வசதியை சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு தான் பயன்படுத்த முடியும் என்றும் விமானம் வெளிச்சமில்லாத சூழலில் பயணிக்கும் போது WiFi வசதியை பயன்படுத்த முடியாது என்றும் இந்த வசதி விரைவில் அனைத்து விமானங்களிலும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
newstm.in