Theme Check

சென்னை மட்டுமல்ல.. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நுழைந்துவிட்ட ஒமைக்ரான் !

சென்னை மட்டுமல்ல.. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நுழைந்துவிட்ட ஒமைக்ரான் !

சென்னை மட்டுமல்ல.. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நுழைந்துவிட்ட ஒமைக்ரான் !
X

ராணிப்பேட்டை மாவட்டம், ஆரணி, கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று ஊர் திரும்பியுள்ளார். இவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வாலாஜபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ராஜேஷின் நெருங்கிய உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று பரவியதா என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டது. அதப்டி அவர்கள் நான்கு பேருக்கும் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
omicron-Covid-variant
இந்த நிலையில், காங்கோவில் இருந்து கடந்த வாரம் ஊர் திரும்பிய திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவரின் தந்தைக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை, மகள் வேறு எங்கெல்லாம் சென்றார்கள் எனவும் ஆய்வு நடக்கிறது. இதனையடுத்து தந்தை மற்றும் மகளுடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்றும், தொற்று கண்டறியப்பட்ட இரண்டு பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


newstm.in

Next Story
Share it