வீட்டிற்கே வரும் சத்துணவு… : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வீட்டிற்கே வரும் சத்துணவு… : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வீட்டிற்கே வரும் சத்துணவு… : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!
X

‘பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்’ என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பொதுமுடக்கம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க உத்தரவிட வேண்டும்” என, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கொரோனா பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், வேலையை இழந்துள்ளனர். கிராமங்களில் பல குடும்பங்கள் வருவாய் இழந்துள்ளன.

எனவே, இந்த மோசமான காலகட்டத்தில், மாணவர்களுக்கு சத்துணவை வீட்டுக்கே சென்று அரசு வழங்க வேண்டும். இதில் சிரமம் இருப்பதாகத் தெரிந்தால், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த சேவையை அரசு மேற்கொள்ளலாம். எனவே, இதுதொடர்பாக ஒரு திட்டத்தை உருவாக்கி, அதுகுறித்த அறிக்கையை வரும் 7ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Tags:
Next Story
Share it