இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23ஆக அதிகரிப்பு!!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதல் முதலாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் தென் ஆப்ரிக்காவுடன் பயணத் தொடர்பு இல்லாத மருத்துவர் ஒருவரும் இருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக சனிக்கிழமையன்று ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயது நபருக்கும், நான்காவதாக தென் ஆப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய 33 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதன் பிறகு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பயணி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்தது. ஞாயிறு இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது.

நேற்று மகாராஷ்டிராவில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
newstm.in

