இப்படி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும்.. ராஷி கண்ணா ஓபன் டாக் !!

இப்படி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும்.. ராஷி கண்ணா ஓபன் டாக் !!

இப்படி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும்.. ராஷி கண்ணா ஓபன் டாக் !!
X

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ராஷி கண்ணா வளர்ந்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக பகீரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.

ஆனாலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என கூறினார்.

அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைமைதான் இருந்தது.

இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it