கொரோனா வைரஸைத் துரத்தியடிக்க நமது கலாச்சாரம் கற்றுத் தரும் பாடம்!!
கொரோனா வைரஸைத் துரத்தியடிக்க நமது கலாச்சாரம் கற்றுத் தரும் பாடம்!!

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலகின் அதி மக்கள் தொகை உள்ள நாடான சீனா கொரோனா பாதிப்பில் இருந்து கடும் சிரமத்திற்கிடையே இப்போது தான் மீண்டு வந்து சுவாசிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சீனா மீண்டெழ குறைந்தது இன்னும் ஐந்து வருட காலமாவது ஆகும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அதே சமயம், உலகில் அதிகமாக பின்பற்றப்படும் கலாச்சாரங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்திய கலாசாரம். மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் கலாச்சாரமும், நாகரிகமும் அற்ற மனிதர்கள் என்ற முன் சிந்தனையுடனேயே நம் நாட்டிற்கு வருகிறார்கள்.
சுத்தம், சுகாதாரம் அற்ற காட்டு மிராண்டிகள் என்ற என்ணத்திலேயே அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பற்றியதாக பெரும்பாலும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் நம்மை ஆண்ட போது ஆள்பவர்களின் வசதிகளுக்காக கலாச்சார மாற்றம் செய்யப்பட்டது. விவேகானந்தர் அமெரிக்காவில் உரையாற்றி ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் அதே நிலைமை நீடிக்கிறது.
ஹைஜீனிக் என்ற விஷயத்தை மேற்கத்திய நாடுகளிடமிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் அளவிற்கு இந்தியர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது.
நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு முறை அரசு முறை விருந்தில் மேலை நாட்டினருடன் விருந்தில் கலந்துக் கொண்டார். அப்போது, ஸ்பூனை பயன்படுத்தாமல் தனது கையால் உணவைச் சாப்பிட்டார். இதை கவனித்த மேலைநாட்டுக்காரர், “ ஐயா, ஸ்பூனைப் பயன்படுத்தாமல் கையால் சாப்பிடுவது சுகாதரமானது அல்ல” என கூறினார். நொடியும் தாமதிக்காமல், “நீங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்பூனைப் பயன்படுத்தி எத்தனையோ பேர் சாப்பிட்டிருக்கலாம். ஆனால், எனது கையைப் பயன்படுத்தி வேறு யாரும் சாப்பிட்டிருக்க முடியாது. ஸ்பூனை விட கையால் உண்பதே சுகாதாரமானது” என்றார் ராதாகிருஷ்ணன்.
வயதில் பெரியோர்களைக் காணும் போது இரு கைகளைக் குவித்து, வணக்கம் கூறி வாழ்த்து பெறுவதே நம் கலாச்சாரம். ஆனால் தற்போது பொது இடங்களில் றிமுகமானவர்களிடம் கைகுலுக்கல், கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை தெரிவித்தல், பார்ட்டிகளில் நின்று கொண்டே ஸ்பூனால் சாப்பிடுவதில் தொடங்கி பல இடங்களில் மேற்கத்திய நடைமுறைகளைப் பின்பற்றி அடுத்து வரும் ஒரு தலைமுறையே சீரழிந்து வருகிறது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள் நம் முன்னோர்கள். தரையில் சம்மணமிட்டு, நன்றாக மென்று தின்ற போது வராத நோய்கள் எல்லாம், இன்று ஸ்டைலாக டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும் போது வருகிறது. நமது முன்னோர்கள் ஆப்பிள்களையும், டிராகன் பழங்களையும், பாதாம், பிஸ்தாக்களையும் சாப்பிட்டா நூறு வயது வரையில் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவர்கள் உண்ட கம்பு, கேழ்வரகு என்று சிறுதானியங்களை நோக்கி இப்போது தான் விழிப்புணர்வுடன் படையெடுக்கத் துவங்கியுள்ளோம்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பரவுவதைத் தவிர்க்கும் நமது பழைய பாரம்பரியங்களைக் கடைப்பிடித்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம் போன்றவைகளைப் பயன்படுத்தி சமைக்கும் உணவுகள். இன்று சிங்கப்பூர் முழுவதும் அனைவரும் தினந்தோறும் கஷாயம் குடிப்பதைப் போல ரசம் வைத்து பருகி வருகிறார்கள்.
கைகுலுக்குவதை எல்லாம் மறந்து விடுங்கள். யாரைப் பார்த்தாலும், இரு கரம் குவித்து வணக்கம் சொல்லுங்கள். நமது பாரம்பரியத்தையும் மீட்டெடுப்போம்.
வெளியே எங்கே சென்று வந்தாலும், கை, கால்களையும், முகத்தையும் நன்றாக கழுவுங்கள். அப்படித் தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
நோய் வரும் சமயங்களில் பயத்துடன் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்காமல், அடுத்த தலைமுறைக்கு சுத்தத்தோடும், ஆரோக்கியத்துடனும் கூடிய நமது கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். ஆரோக்கியமான, பண்பாடான தலைமுறையை உருவாக்குவோம்!
newstm.in