மாணவிகளின் கழிவறையில் பச்சிளம் குழந்தை!! அதிர வைத்த மாணவியின் செயல்!!

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற பார்த்த விடுதியின் காப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து விடுதி காப்பாளர் குழந்தையை மாணவிகளிடம் தூக்கிச்சென்றார்.

மாணவிகளின் கழிவறையில் பச்சிளம் குழந்தை!! அதிர வைத்த மாணவியின் செயல்!!
X

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள மாணவிகளின் விடுதியின் கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற பார்த்த விடுதியின் காப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து விடுதி காப்பாளர் குழந்தையை மாணவிகளிடம் தூக்கிச்சென்றார். யாரும் அதுகுறித்து தெரியாது என கூறியதால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஒரு மாணவி மீது மட்டும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனையில் அந்த மாணவி தான் குழந்தையை பெற்றெடுத்து கழிவறையில் போட்டுவிட்டது சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தை மற்றும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it