Theme Check

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் பரவசம் !!

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் பரவசம் !!

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் பரவசம் !!
X

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 3ஆம் தேதி திருமொழித் திருநாள்வுடன் தொடங்கி 12ஆம் தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடந்தது. தொடர்ந்து, இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை திருவாய்மொழித் திருநாள் இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது.

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பெருமாள் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோ‌ஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பெருமாள் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனிடையே, நாளை முதல் நடைபெறவுள்ள ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார். 19ஆம் தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.

வரும் 22ஆம் தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23ஆம் தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும். நாளை முதல் 21-ம் தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து, 22-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it