மக்களே உஷார்..!! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!
மக்களே உஷார்..!! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 34,75,185 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 909 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,160 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,61,457 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவிலிருந்து 1,008 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,26,065 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,094 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 29,524 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,59,66,829 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் நேற்று உயிரிழப்பு ஏற்படவில்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

