மக்களே கவனம்.. வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !!
மக்களே கவனம்.. வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !!

மே மாதத்தில் ஏராளமான வங்கி விடுமுறை நாட்கள் உள்ளன. அதில் அடுத்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கி விடுமுறை வருகிறது.
அடுத்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து வங்கி விடுமுறை நாட்கள் வருவதால் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த வாரம் மே 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உள்ளது. இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம்கள் திறந்திருக்கும் என்றாலும் வங்கி கிளைகளுக்குசெல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே வாடிக்கையாளர்கள் அதனை திட்டமிட்டு பணப்பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்வது.
newstm.in

