விரைவில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு!!
விரைவில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயருவதை தவிர்க்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. மார்ச் 8ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே போகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோதே பெரும் அச்சம் ஏற்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலரை தொட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 13 ரூபாய் வரை உயருவதை தவிர்க்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வையும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையையும் வைத்துப் பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 12.1 ரூபாய் உயர்த்தினால்தான் நஷ்டத்தையே தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 16ஆம் தேதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.1 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும் எனவும், 15.1 ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்வு தேவை எனவும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
இதுபோக, ஜேபி மார்கன் நிறுவனம் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில், அடுத்த வாரம் மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பெட்ரோல் டீசல் விலை தினசரி தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
newstm.in

