காவல்துறை சித்ரவதை - மாடியில் இருந்து குதித்த பஞ்சாயத்து தலைவர்
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டம் எஸ்.எம்.புரம் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுத்ரி அவினாஷூக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராணி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. புகார் ஒன்றில் சவுத்ரி அவினாஷை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் காவல்துறையினரின் சித்திரவதையால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டம் எஸ்.எம்.புரம் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுத்ரி அவினாஷூக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராணி என்பவருக்கும் இடையே கோயிலை புனரமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், புகார் ஒன்றில் காவல்துறையினர் சவுத்ரி அவினாஷை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுத்ரி அவினாஷ் காவல் நிலையத்தின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in