Theme Check

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தடை... அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தடை... அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தடை... அரசு அதிரடி உத்தரவு!!
X

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது.

மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் குழுக்களாக பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் விளையாடும் நேரத்திலும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

hand rope1

எனவே மாணவர்களின் நலனை கருதி, ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it