10ம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயம் மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் ..!!
10ம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயம் மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் ..!!

பத்தாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கி பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில் நேற்று (11ம் தேதி) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பஞ்சாபி மொழி தொடர்பான ‘பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் கல்வி திருத்த மசோதா’ மற்றும் ‘பஞ்சாப் மாநில மொழி திருத்த மசோதா' உட்பட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், “பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழியாக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Next Story

