எஸ் பேங்க் மோசடியில் ரஜினிகாந்த் மச்சானுக்கு தொடர்பு?
திவால் ஆகியுள்ள எஸ் பேங்கின் தமிழகத் தலைவராக ரஜினிகாந்தின் மச்சான் ரவி ராகவேந்திரா இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் எஸ் பேங்க்கின் பணம் திரையுலகிலும் புழங்கி இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. ரவி ராகவேந்திரா இசை அமைப்பாளர் அனிருத்தின் தந்தை. தமிழகத்திலும் பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

திவால் ஆகியுள்ள எஸ் பேங்கின் தமிழகத் தலைவராக ரஜினிகாந்தின் மச்சான் ரவி ராகவேந்திரா இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் எஸ் பேங்க்கின் பணம் திரையுலகிலும் புழங்கி இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. ரவி ராகவேந்திரா இசை அமைப்பாளர் அனிருத்தின் தந்தை.
தமிழகத்திலும் பல பெரும் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு எஸ் வங்கி கோடிக்கணக்கில் கடன் வழங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி உலாவுகிறது. பொதுவாக ஒரு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற, வங்கியின் தலைமை அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும். அதனால் ரவி ராகவேந்தருக்கு தெரிந்தே கடன் வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த உண்மைகள் தீவிர விசாரணைக்கு பிறகே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்த எஸ் பேங்க் இன்று திவாலாகியுள்ள நிலையில், சாமானிய மக்கள் தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணம் என்னவாகுமோ என்று பயத்தில் உள்ளனர்
newstm.in