வாய், மூக்கு மறைங்க… இல்ல கட்டுங்க ரூ.500!
வாய், மூக்கு மறைங்க… இல்ல கட்டுங்க ரூ.500!

சென்னையில் வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனமாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முககவசம் அணியாதோருக்கு, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், முககவசம் அணியாதோரிடம் இருந்து, டிசம்பர் 31 முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 500 ரூபாய்க்கான ரசீது அச்சிடப்பட்டு வந்துள்ளதால், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முகக்கவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, பொதுமக்கள் அனைவரும், முகக்கவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

