மாதம் ரூ.32,000 சம்பளம்.. பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
மாதம் ரூ.32,000 சம்பளம்.. பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

“குவைத் நாட்டில், வீட்டுப் பணியாளராக வேலை செய்ய 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 500 பெண்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்” என, திருப்பத்தூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குவைத் நாட்டின் ‘Kuwait Gate Foundation’ என்ற நிறுவனத்துடன் கடந்த மாதம் 17-ம் தேதி வீட்டுப் பணிப்பெண்களை பணியமர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அரபு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு மாத சம்பளமாக 32 ஆயிரம் ரூபாயும், அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத சம்பளமாக 29,500 ரூபாயும் வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 30 முதல் 40 வரை ஆகும்.
பணியாளருக்கான மருத்துவப் பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி உள்ளிட்ட இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வேலை அளிப்பவர்களால் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தங்கள் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஒப்பந்தத்தை ரத்து செய்யாத பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
குவைத் நாட்டின் கலாச்சாரப் பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களின் தாய் மொழியில் வழங்க வேண்டும். மாத சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியில் சேர விரும்பினால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்புவோர் தங்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaid [email protected] என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட வேலைக்கான விவரங்களை இந்நிறுவனத்தின் வலைதளமான www.omcman power.com மூலமாகவோ அல்லது 044-22505886/044-22500417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.
அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தமானது 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், பணியில் சேர விரும்புவோர் இக்காலக் கட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்: RC.No B-0821/CHENNAI/CORPN/1000 5/308/84 ஆகும்’’ என தெரிவித்துள்ளார்.