கொரோனாவில் மீண்ட சசிகலா உறவினர் கருப்பு பூஞ்சைக்கு பலி..!
கொரோனாவில் மீண்ட சசிகலா உறவினர் கருப்பு பூஞ்சைக்கு பலி..!

கொரோனாவில் இருந்து மீண்டு, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா உறவினர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (60). கோட்டூர் தெற்கு ஒன்றிய அமமுக ஒன்றிய செயலாளர். கோட்டூர் ஒன்றிய குழு தலைவராகவும் இருந்து வந்தார்.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசியின் உடன் பிறந்த சகோதரர் அண்ணாதுரை (60). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த இவர், கோட்டூர் தெற்கு அமமுக ஒன்றிய செயலாளராகவும், ஒன்றிய குழு தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணாதுரை கடந்த மே மாதம் 15ம் தேதி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று கருப்பு பூஞ்சை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதியானது. இதையடுத்து, சசிகலா ஏற்பாட்டின் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.