பள்ளிகள் மார்ச் 30 வரை விடுமுறை! அலுவலகங்களில் பயோமெட்ரிக் ரத்து!! கொரோனா வைரஸ் தாக்கம்! 

அதே போல், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க டெல்லி மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தலைநகர் டெல்லிக்கு வெளிநாட்டில் இருந்து அதிகம் பேர் வர வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறையும் எச்சரித்து இருந்தது.

பள்ளிகள் மார்ச் 30 வரை விடுமுறை! அலுவலகங்களில் பயோமெட்ரிக் ரத்து!! கொரோனா வைரஸ் தாக்கம்! 
X

இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனரா என்று தனிப்பட்ட முறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்கள் என்று இன்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதே போல், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க டெல்லி மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தலைநகர் டெல்லிக்கு வெளிநாட்டில் இருந்து அதிகம் பேர் வர வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறையும் எச்சரித்து இருந்தது.

பள்ளிகள் மார்ச் 30 வரை விடுமுறை! அலுவலகங்களில் பயோமெட்ரிக் ரத்து!! கொரோனா வைரஸ் தாக்கம்!

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கையெழுத்திடும் பதிவேடு பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, இந்தியாவில் நேற்று வரையில் (மார்ச் 4) 29 பேருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளிகள் மார்ச் 30 வரை விடுமுறை! அலுவலகங்களில் பயோமெட்ரிக் ரத்து!! கொரோனா வைரஸ் தாக்கம்!

மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருமே தீவிர சோதனைக்கு பின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே 12 நாடுகளிலிருந்து வருபவர்களை மட்டும் சோதித்து வந்தோம். கடந்த வாரம் வரை 21 விமான நிலையங்களில் 5,89,000 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், கடல் வழியாக வந்த 15,000 வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனை செய்திருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it