அதிர்ச்சி! கற்பழித்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொள்வீர்களா? குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்த நீதிபதி!
அதிர்ச்சி! கற்பழித்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொள்வீர்களா? குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்த நீதிபதி!

அரசு ஊழியர் ஒருவர், சிறுமியை பல ஆண்டுகளாக வற்புறுத்தி, மிரட்டி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த வழக்கில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் மேஜரான நிலையில், குற்றவாளியிடம், நீங்கள் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டு, கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கி, குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறது சி.ஜே.ஐ. தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச்.
இந்த வழக்கில், சுமார் 4 வாரங்களுக்கு கைது செய்யப்படுவதில் இருந்தும் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு அளித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு அரசு ஊழியர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார உற்பத்தி நிறுவனமான எல்.டி.டி.யில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். அவர் 48 மணி நேரம் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்தால், மாநில சேவை விதிகளின்படி, “அதிகாரத்தை நியமிக்கும் உத்தரவின் பேரில் அவர் பணி இடைநீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கருதப்படுவார்” என்று கூறி அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த விசாரணையில், “இளம்பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு நீங்கள் இதைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு அரசு ஊழியர் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையெனில், நாங்கள் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள்” என்று இந்த விவகாரம் ஆரம்பத்தில் விசாரணைக்கு வந்த போது கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்களை எடுத்துக் கொள்ளவும் கோர்ட் பெஞ்ச் நேரம் அனுமதித்திருந்தது. சில நிமிடங்கள் கழித்து இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "நான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதால் நான் இப்போது அவளை திருமணம் செய்து கொள்ள எந்த நிலையிலும் இல்லை" என்று குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி , சிறுமி 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தொடர்ந்து சிறுமியைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். பின்னர் ஒரு நாள், அதிரடியாக சிறுமியின் வீட்டிற்கு நுழைந்து, வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து தனது புகாரில் சிறுமி, குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீது ஆசிட் வீசி விடுவதாக மிரட்டியதாகவும், அந்த மிரட்டல்களுக்கும் தான் அடிபணியாத போது, பாலியல் உறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் தனது சகோதரரை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி தொடர்ந்து கற்பழித்து மிரட்டி பாலியல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுமி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், இது குறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரின் பெற்றோரிடம் நியாயம் கேட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவரின் தாய், இருவரும் திருமண வயது வந்ததும், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முன்வந்ததாகவும், இது குறித்து இரு குடும்பங்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி 18 வயதை அடைந்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிர்பார்ப்பு ஜாமீன் வழங்கப்பட்டது, பின்னர் அது மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சால் ரத்து செய்யப்பட்டது. அந்த நபருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்த உயர்நீதிமன்றம், அந்த நபருக்கு ஜாமீன் வழங்குவது "கொடூரமானது" என்று கூறியிருந்தது.

