அதிர்ச்சி..! இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில்!

அதிர்ச்சி..! இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில்!

அதிர்ச்சி..! இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில்!
X

இந்தியாவில் 28,529 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தில் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கொரோனா வைரஸ் நோய் நிகழ்த்தும் தாக்குதல் குறித்தான விவாதம் நடைபெற்றது.

அதிர்ச்சி..! இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில்!

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, இந்தியாவில் நேற்று வரையில் (மார்ச் 4) 29 பேருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் 28,529 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று தாக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அதிர்ச்சி..! இந்தியாவில் 28,529 பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில்!

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருமே தீவிர சோதனைக்கு பின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே 12 நாடுகளிலிருந்து வருபவர்களை மட்டும் சோதித்து வந்தோம். கடந்த வாரம் வரை 21 விமான நிலையங்களில் 5,89,000 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், கடல் வழியாக வந்த 15,000 வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனை செய்திருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it