வாழைப்பழ காமெடியில் கலக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகர் காலமானார் !!
வாழைப்பழ காமெடியில் கலக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகர் காலமானார் !!

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் வாழைப்பழ காமெடி மிகவும் பிரபலம்.அதில், மதுரகாரனுக்கு கையே கத்தி, விரலே வீச்சுடா’ என்ற வசனத்தை பேசி கலக்கிய நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் சற்று முன் காலமானார்.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது.சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா தாக்கி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சினிமா பிரபலம் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்தார்.

அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த தகவலை வருத்தத்துடன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பொன்ராம் .
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021
கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் மரணமடைவது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கொரோனாவிற்கு குணச்சித்திர நடிகர் பாண்டு,இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா,பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல்,தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த்,தயாரிப்பாளர் அந்தோணி சேவியர்,நெல்லை சிவா,துணை நடிகர் மாறன் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

