திடீர் விபத்து.. முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு.. ஓபிஎஸ் ஆறுதல்
திடீர் விபத்து.. முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு.. ஓபிஎஸ் ஆறுதல்

கடலூரில் இன்று மதியம் நடைபெற்ற பட்டாசு ஆலையில் திடீரென பெரும் வெடிவித்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சிக்கி மூன்று உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து நிதி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தை சேர்ந்த சித்ரா, நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அம்பிகா மற்றும் மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் - எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/qPaRCk5SKk
— O Panneerselvam (@OfficeOfOPS) June 23, 2022
newstm.in

