சூப்பர் அறிவிப்பு! கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளித்தது தமிழக அரசு!!
சூப்பர் அறிவிப்பு! கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளித்தது தமிழக அரசு!!

வரும் 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு அண்மையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. பிப்ரவரி 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கியிருப்பதாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டுள்ளதாலும் சென்னை கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
கடற்கரைகளில் கூட்டமாக கூடக்கூடாது, மாஸ்க் அணிந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

