தாலி கட்டிய மகன்.. ஜல்சா பண்ணிய மாமனார்.. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
தாலி கட்டிய மகன்.. ஜல்சா பண்ணிய மாமனார்.. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருமணமாகி வந்த புது மருமகளை மகனின் உதவியுடன் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் உள்ள டங்கிபுரா பகுதியில் இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் ஒரு தம்பதியர் வசித்து வந்தனர். இதில் மூத்த மகனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர். அதுவரை வீட்டில் இருந்த புதுப்பெண்ணை அவரது மாமனார் நமது விவசாய நிலத்தில் வேலை இருப்பதாக தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள தோட்டத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மருமகள் தப்பியோட முயன்றப்போதும், மானமானர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் செய்வதுஅறியாமல் திகைத்த அப்பெண் நடந்த கொடுமையை தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். உடனே கோபம் அடைந்த கணவரோ, தனது மனைவியை கடுமையாக தாக்கினார். அதுமட்டுமில்லாமல் தனது அப்பா எப்ப கூப்பிட்டாலும் அவரோடு நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறி தனி அறையில் அடைத்துவைத்தனர்.
அதன்பின்னர் திருமணம் ஆன புதுப்பெண்ணை கணவர், அவரது சகோதரர், சகோதரி, தாய், தந்தை அனைவரும் கொடுமை படுத்தினர். எனினும் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பிய பெண் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அப்பெண்ணையும், மாமனாரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
newstm.in