3 பெண் குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கொடூர தந்தை!!

3 பெண் குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கொடூர தந்தை!!

3 பெண் குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கொடூர தந்தை!!
X

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஃபயாஸ். சூதாட்டத்திற்கு அடிமையாகிய இவர், பணம் கேட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சூதாட்டம் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவியை தாக்கியதோடு தனது 4 குழந்தைகளையும் கடுமையாக அடித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஃபயாஸின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தனது சகோதரன் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து, மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக ஃபயாஸ் நேற்று காலை தனது மனைவியின் சகோதரன் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். ஆனால், சூதாட்ட பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே உன்னோடு வந்து வாழ்வேன். இல்லையேல் வரமாட்டேன் என கூறியுள்ளார்.

3 பெண் குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கொடூர தந்தை!!

இதைக் கேட்ட ஃபயாஸ், கண்டிப்பாக வேலைக்கு செல்வேன் என உறுதி கூறிவிட்டு, குழந்தைகளை வெளியே அழைத்து சென்று வருகிறேன் எனக் கேட்டுள்ளார். அவரும் சரி என நம்பி மகன் மற்றும் 3 பெண் குழந்தைகளை அவருடன் அனுப்பி வைத்துள்ளார்.

நீண்ட நேரமாகிய நிலையில் அழுதபடியே மகன் மட்டும் வீடு திரும்பினான். அப்போது, தந்தை தங்களை அடித்து துன்புறுத்தியாக தாயிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதனால், பதறிப் போன குடும்பத்தினரோ, தந்தை ஃபயாஸுடன் சென்ற 3 மகள்களையும் தீவிரமாக தேடத் தொடங்கினர்.

3 பெண் குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற கொடூர தந்தை!!

பின்னர், ஃபயாஸை கண்டு பிடித்து விசாரித்த போது, திடிக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, தனது குழந்தைகள் மூவரையும் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும், நீரில் மூழ்கடிக்கும் போது, பிழைத்து விடாமல் இருக்க மகள்களின் உடல் மீது அமர்ந்து கொலை செய்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் ஃபயாஸின் குடும்பத்தினரிடையே மட்டுமல்லாமல், அக்கிராம மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஃபயாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it